Sunday, October 7, 2007

அம்பேத்கரும் இந்திய அரசியலும்

நாதியற்று நாலாப்பக்கமும்
புழுக்களாய் நெளிந்தவர்களை
வெடிகுண்டு கிடங்காய் மாற்றி
வெடிக்க வைத்த தீக்குச்சி!

அடிமைச் சங்கிலியை
வெட்டி எறிந்த கோடாலி!
உறங்கிக் கிடந்த சேரிகளை
உசுப்பி விட்டவன்!
ஊமைகளைப் பேச வைத்தவன்!

வாழ்வு எங்கே என
வயல் காட்டில் தேடியவர்
முகத்தை தொலைத்து விட்டு
முகவரியைத் தேடியவர்

விதி இதுதான் என்று
மிதியுண்டு கிடந்தவர்கள்
கோபுரத்தை சுமந்து கொண்டு
அடிக்கல்லாய் போனவர்கள்

திசைகள் தெரியாமல்
தினந்தோறும் அழுதவர்கள்
அழுகையைத் துடைக்க
அம்பேத்கர் கரங்கள்!

வீதியில் இறங்காமல்
விதியை நொந்து பயனில்லை
வாருங்கள் என் பின்னால்
போருக்குத் தயாரவோம்!

அம்பேத்கர் பின்னால்
அணி அணியாய் அடிமை சனம்

அடிமைகளின் விடுதலைக்கு
அடிக்கால் நாட்டவே
அம்பேத்கர் எழுதினார்
அரசியல் சாசனம்

அவர் கையில் பேனா இருந்தது அதற்குப் பின்னால் பூணூல் இருந்தது!

பூணூலில் சிக்கியது இந்தியச் சட்டம்
நூல் இருக்கும் திசையில் தானே பேனா செல்லும் சிக்கலை உடைக்க
சட்ட சிக்கல்கள் ஏராளம்

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
மராத்திய மண்ணில்
மரத்வாடா வையும் எரித்தது
மனம் போன போக்கில்
மக்களையும் எரித்தது

எதிரியிடம் இருந்து
எரி நெருப்பைப் பிடுங்குவோம்!
எரித்த கைகளை- அதில்
முறித்துப் போடுவோம்!
...................... முன்னவன்

No comments: